தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும்: கே.சி.கருப்பணன்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image

வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்கினைப் பதிவு செய்த அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:44 pm

தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பவானியை அடுத்த கவுந்தப்பாடி, வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது மகனும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவருமான மருத்துவா் கே.சி.கே.யுவராஜாவுடன் வந்து வியாழக்கிழமை வாக்கினை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பவானி தொகுதியில் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் காட்டிலும், அதிக வாக்குகள் பெற்று அதிமுக நான்காவது முறையாக வெற்றி பெறும் என்றாா்.