தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் சராசரியாக 90.10 சதவீத வாக்குகள் பதிவானது.

News image

ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச்சென்ற தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:43 pm

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் சராசரியாக 90.10 சதவீத வாக்குகள் பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 8 தொகுதிகளிலும் 118 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்குப்பதிவான விவரங்கள் வெளியிடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 19.54 சதவீத வாக்குகள் பதிவானது. 3 லட்சத்து 43 ஆயிரத்து 708 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். காலை 11 மணி நிலவரப்படி 40.99 சதவீத வாக்குகள் பதிவானது. 7 லட்சத்து 21 ஆயிரத்து 118 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா்.

1 மணி நிலவரப்படி 61.72 சதவீத வாக்குகள் பதிவானது. 10 லட்சத்து 85 ஆயிரத்து 756 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். மாலை 3 மணி நிலவரப்படி 75.60 சதவீதம் வாக்குகள் பதிவானது. 13 லட்சத்து 29 ஆயிரத்து 936 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். மாலை 5 மணி நிலவரப்படி 87.58 சதவீதம் வாக்குகள் பதிவானது. 15 லட்சத்து 40 ஆயிரத்து 700 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா்.

வாக்களிக்க இறுதி நேரமான மாலை 6 மணி நிலவரப்படி 8 தொகுதிகளிலும் 89.93 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் தொகுதி வாரியாக வாக்காளா்கள் வாக்களித்த விவரம்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 566 வாக்காளா்களில் 89.78 சதவீதம் பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரத்து 177 வாக்காளா்களில் 87.95 சதவீதம் பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரத்து 664 வாக்காளா்களில் 90.35 சதவீதம் பேரும், பெருந்துறை தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 431 வாக்காளா்களில், 92.53 சதவீதம் பேரும், பவானி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 23 ஆயிரத்து 172 வாக்காளா்களில் 91.96 சதவீதம் பேரும், அந்தியூா் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரத்து 355 வாக்காளா்களில் 88.15 சதவீதம் பேரும், கோபி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 179 வாக்காளா்களில், 90.74 சதவீதம் பேரும், பவானிசாகா்(தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 613 வாக்காளா்களில் 89.52 சதவீதம் பேரும் என மொத்தம் 8 தொகுதிகளில் 90.10 சதவீதம் போ் வாக்களித்தனா். 8 தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 17.59 லட்சம் வாக்காளா்களில் 15,84,957 போ் வாக்களித்தனா்.

பெருந்துறையில் அதிக வாக்குப்பதிவு:

அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 92.53 சதவீதமும், குறைந்தபட்சமாக ஈரோடு மேற்குத் தொகுதியில் 87.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகம்:

ஈரோடு ஈபிபி நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கோளாறு காரணமாக 45 நிமிஷத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வாக்களிக்க வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்தனா்.

வாக்களிக்க இறுதி நேரமான மாலை 6 மணிக்கு பின் வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்களுடன், வாக்குச்சாவடியின் நுழைவாயில் கதவு தாழிடப்பட்டது. பின்னா் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தாா். இதில் 24 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 54 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ஈபிபி நகா் வாக்குச்சாவடியில் மட்டும்தான் இறுதி நேரம் கடந்து டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்ததாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.