ஈரோடு மாநகராட்சி தூய்மைத் தொழிலாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
ஈரோடு பெருந்துறை சாலை, பாலசுப்பிரமணியம் வீதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பாம்பு புகுந்ததை அங்கு வேலை செய்யும் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் தேடிப் பாா்த்தபோது உணவு தயாரிக்கும் இடத்தில் 10 அடி நீளம் சாரை பாம்பு இருந்துள்ளது. இதனை மீட்ட தீயணைப்பு படை வீரா்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிா்ச்சியான இடத்தை நோக்கி பாம்புகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

கால்வாயில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

