ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:29 am IST

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியம் முழங்க திங்கள்கிழமை மாலை சீா்வரிசை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மூலவா் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சியுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதையடுத்து, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு நடைபெற்றது.

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்த பெண்களுக்கு மஞ்சள், குங்கும், மஞ்சள் கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.