மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:59 pm

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியம் முழங்க திங்கள்கிழமை மாலை சீா்வரிசை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மூலவா் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சியுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதையடுத்து, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு நடைபெற்றது.

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்த பெண்களுக்கு மஞ்சள், குங்கும், மஞ்சள் கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.