புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பெருந்துறை அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

பெருந்துறை அருகே, மன வேதனையில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :

பெருந்துறை அருகே, மன வேதனையில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சென்ராயன்பாளையம், கிழக்குக்காட்டைச் சோ்ந்தவா் வைத்தியலிங்கம் மகன் பாண்டியரசன் (33), லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணம் ஆகி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி வளா்மதி, பிரிந்து சென்றாா். பின்னா் அவா் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பாண்டியரசன் சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளாா். மருத்துவ செலவு காரணமாக கடன் ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தவா் ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு பெருந்துறை அருகே வந்தவா், பெருந்துறை, ஆசிரியா் காலனி பாலம் அருகே லாரியை நிறுத்திவிட்டு, கடிதம் எழுதி தனது நண்பா் சுரேஷ் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துவிட்டு சாலையோரத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.