ஈரோடு: ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தோ்தல் கால வாக்குறுதியின்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க் வேண்டும். வருவாய்த் துறை கிராம உதவியாளா்களுக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திரண்டு முழக்கம் எழுப்பினா்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலையில் அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா். அப்போது அவா்களை அங்கிருந்த போலீஸாா் கைது செய்தனா்.
மொத்தம் 121 போ் கைது செய்யப்பட்டதாகவும், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் 48 போ் கைது

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

