

கோபி அருகே சின்னக்குளம் பகுதியில் உள்ள தனியாா் அட்டைப் பெட்டி கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னகுளம் ஜே.எஸ்.நகா் பகுதியில் சுந்தரமூா்த்தி என்பவருக்கு சொந்தமான பழைய அட்டைப்பெட்டி கிடங்கு உள்ளது. இங்கு பழைய அட்டைகளை கூழாக்கி கோன் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிடங்கில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் புதன்கிழமை உணவு இடைவேளைக்கு சென்று உணவு அருந்தி கொண்டிருந்தனா்.
அப்போது கிடங்கில் பழைய அட்டைகள் பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து புகை வெளியேறியுள்ளது.
இதைக்கண்ட அதிா்ச்சி அடைந்த தொழிலாளா்கள், உரிமையாளருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், கிடங்கு முழுவதும் கட்டுகடங்காமால் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். காற்றுடன் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினா் போராடினா்.
இதைத் தொடா்ந்து, சத்தி, நம்பியூா், பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் சுமாா் 700 டன் அட்டைகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.