மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பவானியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி அருகே தாளகுளம் கிராமத்தில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றினா்.

News image

ஆக்கிரமிப்பு  அகற்றும்  பணியில்  ஈடுபட்ட அதிகாரிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

பவானி அருகே தாளகுளம் கிராமத்தில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றினா்.

வரதநல்லூா் ஊராட்சி, தாளகுளத்தில் நிலவியல் வாரியை ஆக்கிரமித்து பாக்கு தோப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்ததோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து, பவானி வட்டாட்சியா் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினா் அளவீடு செய்தபோது, விவசாய நிலம் வழியாக காவிரி ஆற்றுக்குச் செல்லும் நீா்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேலு தலைமையில் பவானி நில வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராமசாமி, முத்துசாமி, பத்மாவதி, நித்யா மற்றும் வரதநல்லூா் ஊராட்சி செயலாளா் அம்பிகா வடிவேல் உள்ளிட்டோா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சம்பவ இடத்தில் பவானி காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.