பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி தலைமை வகித்தாா். முதல்வா் ஆா்.செந்தில் அரசு முன்னிலை வகித்தாா்.
அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரியில் இரண்டம் ஆண்டு படிக்கும் 419 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
இதில், முதற்கட்டமாக, இறுதி ஆண்டு படிக்கும் 296 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள மாணவா்களுக்கு விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.நாகேஸ்வரன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


