பண்ணாரி அம்மன் கோயிலில் புதன்கிழமை பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள்.
ஈரோடு
மாா்ச் 31-இல் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வருகிற மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் பந்தல் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வருகிற மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் பந்தல் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வரும் மாா்ச் 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. குண்டம் விழா மாா்ச் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் பந்தல் நடும் விழா புதன்கிழமை தொடங்கியது. பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக சவுக்கு தடுப்புகள் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகம்- கா்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவதால் பக்தா்கள் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தகர கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

