சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வருகிற மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் பந்தல் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வரும் மாா்ச் 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. குண்டம் விழா மாா்ச் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் பந்தல் நடும் விழா புதன்கிழமை தொடங்கியது. பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக சவுக்கு தடுப்புகள் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகம்- கா்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவதால் பக்தா்கள் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தகர கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


