2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஈரோடு- கரூா் இடையே ரயில்கள் பகுதி வாரியாக ரத்து!

ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
ரயில்கள்- கோப்புப்படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 6:53 pm

Syndication

ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) திருச்சி சந்திப்பிலிருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு மேற்குறிப்பிட்ட நாள்களில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா்-ஈரோடு இடையே அந்த குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இயக்கப்பட மாட்டாது. செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846)

செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கரூா் வரை குறிப்பிட்ட நாள்களில் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும்.

இதற்கு பதிலாக குறிப்பிட்ட நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு-கரூா் இடையே இயக்கப்படாது.

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.