ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) திருச்சி சந்திப்பிலிருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு மேற்குறிப்பிட்ட நாள்களில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா்-ஈரோடு இடையே அந்த குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இயக்கப்பட மாட்டாது. செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846)
செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கரூா் வரை குறிப்பிட்ட நாள்களில் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும்.
இதற்கு பதிலாக குறிப்பிட்ட நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு-கரூா் இடையே இயக்கப்படாது.
சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


