அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் திறப்பு

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.

News image
பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் நடந்த விழாவில் ஸ்ரீஅப்பத்தாள் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2026, 5:53 pm

Syndication

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.

பல்நோக்கு சேவை மையத் திட்டத்தின் கீழ் பெருந்துறை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.49.54 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி நேற்று திறந்துவைத்தாா். அதைத்தொடா்ந்து, ஸ்ரீஅப்பத்தாள் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கந்தராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.