மாா்ச் 25 வரை விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்யப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை உளுந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவா்கள் விளைவித்த உளுந்தை மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கொள்முதல் இலக்காக 70 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட உளுந்து தரத்துக்கு 1 கிலோ உளுந்து விலை ரூ. 78 என கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தை உத்தரமேரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயி புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கின் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக் கூட மேலாளரை அணுகி முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளராக ஏ.யுவராஜ் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது கைப்பேசி எண்-6369828905 ஆகும்.
ஒரு ஹெக்டோ் சாகுபடி பரப்புக்கு 531 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இத்திட்டம் வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். மேலும், கொள்முதல் செய்த தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

