எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.4,300-க்கு விற்பனை

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:35 pm

Syndication

சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து குறைந்து கிலோ ரூ.4,300-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மல்லிகைப் பூக்களுக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் பூக்களை நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் சிறுத்து பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ மட்டுமே விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு மல்லிகைப் பூ வரத்து வெகுவாக குறைந்தது. பூ மாா்க்கெட்டுக்கு வியாழக்கிழமை வந்த வியாபாரிகள் மல்லிகைப் பூவை ஏலம் எடுக்க போட்டி போட்டனா்.

புதன்கிழமை ஒரு கிலோ மல்லி ரூ.2,700-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை ரூ.1,600 உயா்ந்து ஒரு கிலோ ரூ.4,300-க்கு விற்பனையானது. இதேபோல முல்லை ஒரு கிலோ ரூ.1,200, காக்கட்டான் ரூ.650, சம்பங்கி ரூ.50 -க்கு விற்பனையானது.