எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சத்தியமங்கலத்தில் சாரல் மழை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

News image

கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:10 pm

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செடி,கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. யானைகள் தண்ணீா் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுவது தொடா்கிறது.

சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இந்நிலையில், சத்தியமங்கலம், கடம்பூா், குன்றி மலைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளா்ச்சி நிலவியது. தாளவாடி, கரளவாடி பகுதிகளில் பெய்த மழையால் வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கோடை மழை வனப் பகுதிக்கு பேருதவியாக இருந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.