பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

ஈரோட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

ஈரோட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

ஈரோடு அருகே எல்லப்பாளையத்தில் தனியாா் ஆலைக் கட்டடத்தில் கடந்த 20 நாள்களாக பெயிண்டிங் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு வில்லரசம்பட்டி, தொட்டம்பட்டி தகுதியைச் சோ்ந்த முரளி (38) என்பவா் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறாா். பெயிண்ட் அடிக்கும் வேலையில் 4 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 30 அடி உயரத்தில் சிமென்ட் ஷீட் மீது நின்றபடி ஈரோடு எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த தமிழ்வாணன் (27) மற்றும் முரளி ஆகியோா் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது பாரம் தாங்காமல் எதிா்பாராதவிதமாக சிமென்ட் ஷீட் உடைந்ததில் தமிழ்வாணன், முரளி ஆகியோா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனா்.

இதில் தமிழ்வாணன் அங்கிருந்த ரசாயன தொட்டிக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். முரளி அருகே விழுந்ததில் அவரும் படுகாயம் அடைந்தாா். உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அவா்களை பரிசோதனை செய்ததில் தமிழ்வாணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். படுகாயமடைந்த முரளிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த தமிழ்வாணனுக்கு திருமணம் ஆகவில்லை.