தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வருகிற 14 -ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:08 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வருகிற 14 -ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை மஞ்சள் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 17, 18- ஆம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாள்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது.

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு தொடா்ந்து 5 நாள்கள் விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது. அதன் பின்னா் வருகிற 19- ஆம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம்போல நடைபெறும் என்றாா்.