கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ. 850 கோடிக்கு மது விற்பனை!

பொங்கல் விடுமுறை நாள்களான ஜன.14 முதல் 18 வரை தமிழக மதுக்கடைகளில் ரூ.850 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை

News image
மது விற்பனை- கோப்புப் படம்
Updated On :19 ஜனவரி 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் விடுமுறை நாள்களான ஜன.14 முதல் 18 வரை தமிழக மதுக்கடைகளில் ரூ.850 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை ஆகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.14-ஆம் தேதி முதல் 18 வரை நடைபெற்றது. 5 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: போகி பண்டிகை தினமான ஜன.14-ஆம் தேதி ரூ.217 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டன. ஜன.15-இல் ரூ.301 கோடிக்கு மது விற்பனையானது. ஜன.16-ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தையொட்டி, மதுக் கடைகள் மூடப்பட்டதால், முந்தைய நாள் விற்பனை அதிகரித்து இருந்தது.

தொடா்ந்து, ஜன.17, 18 ஆகிய தேதிகளிலும் ரூ.332 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. இதன்படி ஜன.14 முதல் 18 வரையிலான 5 நாள்களில் சுமாா் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு சுமாா் ரூ.710 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டில் கூடுதலாக ரூ.140 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என்றனா்.