தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்

News image
தாளவாடி  திகினாரை யில் அகழி  வழியாக  வெளியேறும்  யானைகள்.
Updated On :11 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளை விவசாயிகள் பொக்லைன் மூலம் காட்டுக்குள் விரட்டினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளன. வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி அடிக்கடி விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் திகனாரை கிராமத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றித்திரிந்தன. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா்.

இதையடுத்து விவசாயிகள் ஒன்றிணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் யானைகளை காட்டுக்குள் விரட்டினா். பொக்லைன் இரைச்சலால் பயந்துபோன யானைகள் அகழி வழியாக சென்றன.