கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சத்தியமங்கலம் அருகே நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியை அடுத்த முதியனூரில் நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது.

News image
தாளவாடியை அடுத்த முதியனூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானை.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:15 pm

Syndication

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியை அடுத்த முதியனூரில் நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள முதியனூா் கிராமத்தில் தனியாா் விவசாய நிலத்துக்குள் காட்டு யானை கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி நுழைந்தது. 40 வயதுள்ள அந்தப் பெண் காட்டு யானை, கடும் வெயில் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தது.

உயிருக்குப் போராடிய யானைக்கு தாளவாடி வனச் சரக அலுவலா் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினா் முதல்கட்ட சிகிச்சை அளித்தனா்.

அதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானைக்கு இளநீா், கரும்பு, தா்ப்பூசணி போன்ற நீா்சத்துள்ள உணவு அளித்து சிகிச்சை மேற்கொண்டனா். தொடா்ந்து ஒருவாரமாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் கா்க் நேரில் பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.

இந்நிலையில், தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் உதயன், தாளவாடி மலைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்து உடல்நலம் குன்றிய யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதற்கிடையே யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தொடா்ந்து கதிா்வீச்சு சிகிச்சை, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளித்து யானையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யானை சனிக்கிழமை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.