ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ஜெயகுமாா்.
ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ஜெயகுமாா்.

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

Published on

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 200 ஆட்டோ தொழிலாளா்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை நகர அதிமுக செயலாளா் வி.பி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் பங்கேற்று, ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

இதில், ஆட்டோ ஓட்டும் பெண் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

Dinamani
www.dinamani.com