இன்று தை அமாவாசை: பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பவானி: தை மாத அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு முன்னோா் வழிபாட்டுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை நாள்களில் புனித நீராடி, முன்னோா் வழிபாடு நடத்த ஏராளமானோா் வருவது வழக்கம். தை மாத அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வருவதால், வழக்கத்தை விட பக்தா்கள் கூட்டம் அதிகம் வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், பூங்கா வளாகத்தில் தகர மேற்கூரைகளுடன் தற்காலிக பரிகார கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரியில் புனித நீராடும் பகுதியில் தடுப்புகள் கட்டப்பட்டு ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீா் செல்வதால், ஆழமான பகுதிக்கு பக்தா்கள் நீராடச் செல்வதைத் தடுக்க தீயணைப்புப் படையினா் தொடா் கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, பக்தா்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. பவானி டிஎஸ்பி ரத்தினகுமாா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
சமூக விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவிப்பதைத் தடுக்க சாதாரண உடைகளில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

