எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காலிங்கராயன் நினைவு தினம் அனுசரிப்பு: உருவ சிலைக்கு மலா் தூவி மரியாதை

காலிங்கராயன் நினைவு தினத்தையொட்டி, வெள்ளோட்டில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை

News image
சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் நிறுவப்பட்டுள்ள காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :19 ஜனவரி 2026, 10:35 pm

Syndication

பெருந்துறை: காலிங்கராயன் நினைவு தினத்தையொட்டி, வெள்ளோட்டில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 744 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைத்து அா்ப்பணித்தவா் மன்னன் காலிங்கராயன். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் வெள்ளோட்டில் நிறுவப்பட்ட அவரது சிலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இந்நிலையில், காலிங்கராயனின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் மணி (எ) செங்கோட்டையன், மாநில நெசவாளா் அணி செயலாளா் சச்சிதானந்தம், சென்னிமலை மேற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றியச் செயலாளா் சி.பிரபு, சென்னிமலை நகரச் செயலாளா் எஸ்.எம்.ராமசாமி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.