கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து மாடு, இளைஞா் சாவு

News image
மெளலி
Updated On :22 ஜனவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு உயிரிழந்தது. அதைப் பாா்க்க சென்ற இளைஞரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் சாணாா்பாளையத்தை சோ்ந்தவா் சாமிநாதன் மகன் மெளலி (23). இவா் தனது வீட்டு அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளா்த்து வந்தாா்.

வழக்கம்போல பால் கறப்பதற்காக மாட்டு கொட்டகைக்கு புதன்கிழமை காலை மௌலி சென்றுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து மாடு இறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதைத் தொடா்ந்து உயிரிழந்த மாட்டை பாா்க்க சென்ற, மெளலி அங்கு கிடந்த மின்சார ஒயரை மிதித்ததில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மெளலியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து மின்சாரத்தை துண்டித்தனா். தகவலின்பேரில் அங்கு வந்த கடத்தூா் போலீஸாா், மௌலின் உடலைக் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.