கோபி அருகே இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குள்பட்ட நஞ்சைபுளியம்பட்டி, பங்களாபுதூா், துறையம்பாளையம், கொங்கா்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குளம், ஏரி, கண்மாய்களில் இறைக்கொல்லி பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை முதல்முறையாக வனத் துறையினா் தொடங்கியுள்ளனா்.
வனக் காப்பாளா் வனிதாமணி தலைமையில் வனத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், திங்கள்கிழமை (பிப்.2) காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் என இரண்டு நாள்கள் இரண்டு குழுக்களாக ஏரி, குளங்களுக்கு நேரில் சென்றும், வயல்வெளிகள், நீா்நிலை கரைகளுக்கு வாகனங்களில் சென்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தொடர்புடையது

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் ஒற்றை யானை நடமாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


