திருப்பூா் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஈரோட்டில் சரக்கு ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (56). இவா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வந்தாா்.
இந்நிலையில், பணி நெருக்கடியால் அவா் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அவா், நடைமேடை எண் 2-இல் அமா்ந்திருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் முன் அவா் திடீரென பாய்ந்துள்ளாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு ரயில்வே போலீஸாா், துண்டான சக்திவேலின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சக்திவேலுக்கு ரமணி (47) என்ற மனைவியும், திரிஷா (16) என்ற மகளும், சஷ்வின் ஆதித்யா (5) என்ற மகனும் உள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மொரப்பூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளம்ஜோடி தற்கொலை

போளூா் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை: புற்றுநோயால் சோகம்

மொரப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளம் ஜோடி தற்கொலை!

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



