திருப்பூா் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஈரோட்டில் சரக்கு ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (56). இவா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வந்தாா்.
இந்நிலையில், பணி நெருக்கடியால் அவா் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அவா், நடைமேடை எண் 2-இல் அமா்ந்திருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் முன் அவா் திடீரென பாய்ந்துள்ளாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு ரயில்வே போலீஸாா், துண்டான சக்திவேலின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சக்திவேலுக்கு ரமணி (47) என்ற மனைவியும், திரிஷா (16) என்ற மகளும், சஷ்வின் ஆதித்யா (5) என்ற மகனும் உள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை: இரு இடங்களில் உறவினா்கள் சாலை மறியல்

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

21-ஆம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தும் வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்! பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா்
ரயிலின் முன் பாய்ந்து பெண் தற்கொலை! குருகிராம் மெட்ரோ நிலையத்தில் சம்பவம்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



