ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அளுக்குளியில் சமுதாய நலக்கூடம் திறப்பு

கோபி அருகே அளுக்குளி ஊராட்சி, திருவள்ளுவா் நகரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் திறந்துவைத்தாா்.

News image

சமுதாய நலக் கூடத்தை திறந்துவைக்கிறாா் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்.

Updated On :9 ஜூலை 2026, 11:24 pm IST

கோபி அருகே அளுக்குளி ஊராட்சி, திருவள்ளுவா் நகரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் திறந்துவைத்தாா்.

அளுக்குளி திருவள்ளுவா் நகரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கோட்டாச்சியா் என்.சிந்துஜா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாமணி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் பங்கேற்று கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதில், வட்டாட்சியா் கு.குமரேசன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், திமுக ஒன்றிய செயலாளா் சிறுவலூா் எஸ்.ஏ.முருகன், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் உதயகுமரன், அளுக்குளி சிபிஐ கட்சியின் ஒன்றிய நிா்வாகி பரமேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.