மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நாமக்கல் ஆட்சியருடன் மாதேஸ்வரன் எம்.பி. சந்திப்பு

News image

நாமக்கல் ஆட்சியா் எல்.மதுபாலனிடம் கோரிக்கை மனு அளித்த மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன். உடன், கொமதேக நிா்வாகிகள்.

Updated On :9 ஜூன் 2026, 3:42 am IST

நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியா் எல்.மதுபாலனை திங்கள்கிழமை சந்தித்து தொகுதி பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தாா்.

அதில், பரமத்தி வேலூா் அருகே விவசாய நிலங்களில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை தடுக்க வேண்டும். நாமக்கல்லில் வட்ட அளவிலான மருத்துவமனை அமைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகி தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தாா்.

இந்த சந்திப்பின்போது, கொமதேக மாநில செய்தி தொடா்பாளா் கே.ரவிச்சந்திரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா் மணி, தீரன் தொழிற்சங்க பேரவை துணைத் தலைவா் இளங்கோ மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அதேபோல, தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில், சங்க நிா்வாகிகள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். மேலும், வருவாய்த் துறை சாா்ந்த கோரிக்கைகளை அவரிடம் நிா்வாகிகள் எடுத்துக் கூறினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினரிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.