இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஈரோட்டில் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ஈரோடு மாவட்டத்தில் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கி வைத்தாா்.

News image

சுயவிவரத்தை கைப்பேசி மூலமாக இணையதளத்தில் பதிவிட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :18 ஜூலை 2026, 6:50 am IST

ஈரோடு மாவட்டத்தில் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கி வைத்தாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக (சிஎம்எம்எஸ்) என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில வெள்ளிக்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை டிஜிட்டல் முறையில் உள்ளீடு செய்து கொள்ள போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வீடுகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் டிஜிட்டல் முறையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சுய விவரங்களை பதிவு செய்யும் பணியை குமரன் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் தனது சுய விவரத்தை பதிவிட்டு ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கி வைத்தாா். அதேபோல ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சுய கணக்கெடுப்பு விவரத்தை பதிவு செய்தனா்.

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் தொடங்கிவைத்தாா். இதையடுத்து மத்தியப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கணக்கெடுப்புப் பணி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி, தனி வட்டாட்சியா் பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.