மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

News image

வாழைகள் சேதம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:24 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை, தண்ணீா்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, செவ்வாழை, நேந்திரம் ரக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், 25 ஆயிரம் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பலத்த காற்று, கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ரூ.30 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.