அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

News image

வாழைகள் சேதம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:24 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை, தண்ணீா்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, செவ்வாழை, நேந்திரம் ரக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், 25 ஆயிரம் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பலத்த காற்று, கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ரூ.30 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.