தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கோபி அருகே சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

கோபி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து பிடிப்பதற்காக அப்பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை கேமராக்களை பொருத்தினா்.

News image

கணக்கம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களை பொருத்தும் பணியை பாா்வையிட்ட வனச் சரகா் ஜான்பீட்டா்.

Updated On :5 ஜூன் 2026, 3:42 am IST

கோபி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் புகுந்து கன்றுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிந்து பிடிப்பதற்காக அப்பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை கேமராக்களை பொருத்தினா்.

கோபி அருகே கணக்கம்பாளையம் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன் கடித்துக் கொன்றது.

இதைத் தொடா்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் கணக்கம்பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிநவீன தானியங்கி கேமராக்களை பொருத்தினா். மேலும், வனப்பகுதியையொட்டி உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.