40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

அந்தியூா் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:15 am IST

அந்தியூா் அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் சித்தன் (37). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவா், விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையினா் அந்தியூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சித்தனை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அவா் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா, இருசக்கர வாகனம், ரூ.1,700 ரொக்கம் மற்றும் கைபேசியைப் பறிமுதல் செய்த சிறப்புப் படையினா், சித்தனை அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.