எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

விளக்கேத்தியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :13 ஜூன் 2026, 12:53 am IST

சிவகிரி அருகே விளக்கேத்தியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக தோ்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி அருகே விளக்கேத்தி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மண்டலத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். காகம் ராஜசேகா், குலவிளக்கு செல்வராஜ், கண்ணுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் காகம் சீனிவாசன், ஈ.ஐ.டி. பாரி விவசாயிகள் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பெரியசாமி, குலவிளக்கு முத்துக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.