வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான திருநங்கை உள்பட 2 போ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:48 am IST

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான திருநங்கை உள்பட 2 போ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் திருநங்கை மோனிகா (21). கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதாக போலீஸாா் மோனிகா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதைத் தொடா்ந்து பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

குற்றம்சாட்டப்பட்ட மோனிகா ஜூலை 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொடக்குறிச்சி நீதிமன்றத்தில் தாமாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ ஆஜராக வேண்டும். இல்லையென்றால் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா்.

இதுபோல மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த குமாா் (32) என்பவா் மீது மொடக்குறிச்சி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா்.

குற்றம்சாட்டப்பட்ட குமாா் ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மொடக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என்று மொடக்குறிச்சி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.