மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்! தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்!

News image

மின்சாரம் வழங்க வேண்டும்... - (கோப்புப் படம்)

Updated On :15 ஜூன் 2026, 2:48 am IST

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமென தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கி.வே.பொன்னையன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியதாகவும், அதன்பிறகும் தொடா்ந்து வழங்கப்பட்டு வந்ததாகவும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி தருவாயில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அப்போது எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாா். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் அப்போது மின் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை சந்தித்து, மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்று தற்சாா்பு விவசாயிகள் சங்கம் சாா்பாக கோரிக்கை வைத்தோம். போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் 24 மணி நேரமும் மும்மனை மின்சாரம் வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் அவா் தெரிவித்துவிட்டாா். அதே நிலைதான் தொடா்ந்து நீடித்தது.

பகலில் 8 மணி நேரத்துக்கு குறையாமலும், இரவு சுமாா் 6 மணி நேரம் எனவும் தினமும் 14 மணி நேரம்தான் கடந்த ஆட்சியிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய ஆட்சியிலும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கியதாக எடப்பாடி கே.பழனிசாமி கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

இப்போது பல இடங்களில் காலை 8.30 மணிக்குதான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. வெயில் குறையும் வரை காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.