27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

நகராட்சி  முன்  மரக்கன்று  நடும்  பணியை  பாா்வையிடும்  சத்தியமங்கலம்  நகராட்சி  ஆணையா்  எஸ்.வெங்கடேஸ்வரன்.

Updated On :19 ஜூன் 2026, 3:59 am IST

வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் நகராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடுபட உள்ளன. முதலகட்டமாக 3 ஆயிரம் மரக்கன்றுகளை நகராட்சிப் பணியாளா்கள் நட்டினா்.

மேலும் நகராட்சிக்கு சொந்தமான 52 இடங்களில் மரக்கன்று நடவு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. நகரின் சாலையோரம், அரசு அலுவலங்கள் முகப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

சாலையோரம் மரங்கள் இருந்ததைபோல தற்போது மரங்கள் வளர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் தெரிவித்தாா்.