நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

புன்செய்புளியம்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:54 am IST

தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி காரப்பாடி சுப்பிரமணி முன்னிலை வகித்தாா்.

இதில், சட்டப் பேரவைத் தோ்தலின்போது தவெக அறிவித்தபடி, விவசாயிகளின் பயிா்க் கடனை முழமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்ப வேண்டும். அத்திக்கடவு 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். குடியிருப்பு, விளைநிலங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தமிழக அரசு பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.