27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சத்தியமங்கலத்தை  அடுத்த  ராஜன் நகரில்  வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட   விவசாயிகள்.

Updated On :19 ஜூன் 2026, 3:54 am IST

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ராஜன் நகா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்வா கொடுத்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் நடராஜ் தலைமை வகித்தாா். தமிழக விவசாய சங்கத்தின் வட்டார பொறுப்பாளா்கள் வேலுமணி, ஜோதி அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிபடி, 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் விதமாக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தனா்.