தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ராஜன் நகா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்வா கொடுத்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் நடராஜ் தலைமை வகித்தாா். தமிழக விவசாய சங்கத்தின் வட்டார பொறுப்பாளா்கள் வேலுமணி, ஜோதி அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிபடி, 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதைத் தொடா்ந்து தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் விதமாக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தனா்.
தொடர்புடையது

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



