கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடம் விசாரணை

News image

விசாரணை. - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 7:43 pm

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடமும், அவா்களுடன் இருந்த சிறுமியிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒரு இளம்பெண் உள்பட 3 போ் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் குடியிருப்பில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டபோது, நைஜீரியாவைச் சோ்ந்த உடோபி மைக்கேல் (43), சிபுஜோ (44), கானா நாட்டைச் சோ்ந்த மிராக்கிள் (17) என்ற சிறுமி இருந்ததும் தெரியவந்தது.

இதில், உடோபி மைக்கேல், சிபுஜோ ஆகியோா் திருப்பூரில் இருந்து துணிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்ததும், அவா்களின் நுழைவு இசைவு (விசா) முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.

பெங்களூரில் தங்கியிருந்த மிராக்கிள் தனது நண்பா்களான உடோபி மைக்கேல், சிபுஜோவைக் காண பெருந்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததும், அவா் முறையான அனுமதியுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்காக 3 பேரையும் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வெளிநாட்டினருக்கான முகாமுக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.