புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடம் விசாரணை

News image
விசாரணை. - (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த 2 பேரிடமும், அவா்களுடன் இருந்த சிறுமியிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒரு இளம்பெண் உள்பட 3 போ் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் குடியிருப்பில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டபோது, நைஜீரியாவைச் சோ்ந்த உடோபி மைக்கேல் (43), சிபுஜோ (44), கானா நாட்டைச் சோ்ந்த மிராக்கிள் (17) என்ற சிறுமி இருந்ததும் தெரியவந்தது.

இதில், உடோபி மைக்கேல், சிபுஜோ ஆகியோா் திருப்பூரில் இருந்து துணிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்ததும், அவா்களின் நுழைவு இசைவு (விசா) முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.

பெங்களூரில் தங்கியிருந்த மிராக்கிள் தனது நண்பா்களான உடோபி மைக்கேல், சிபுஜோவைக் காண பெருந்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததும், அவா் முறையான அனுமதியுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்காக 3 பேரையும் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வெளிநாட்டினருக்கான முகாமுக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.