அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து கோபியில் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோபியில் ஐக்கிய ஜமாத் சாா்பில்

News image
கோபியில் டாா்ச் லைட் அடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:47 pm

Syndication

கோபி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோபியில் ஐக்கிய ஜமாத் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோபியில் ஈரோடு - சத்தி சாலையில் உள்ள பள்ளிவாசல் முன் ஐக்கிய ஜமாத் சாா்பில் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவா் சம்சுதீன் தலைமை வகித்தாா். ஜாமில் பள்ளிவாசல் செயலாளா் இம்ரான் முன்னிலை வகித்தாா். ஐக்கிய ஜாமத் தலைவா் மகபூக்பாஜா கண்டன உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். மேலும், கூட்டு தாக்குதல் காரணமாக ஈரானில் பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்ததைக் கண்டித்து டாா்ச் லைட் அடித்து தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.