அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மறியல்

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
பவானிசாகா்  சாலையில்  மறியலில்   ஈடுபட்ட  தொழிலாளா்கள்.
Updated On :6 மார்ச் 2026, 10:31 pm

Syndication

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உத்தண்டியூா் ஊராட்சியில் 100 வேலைத் திட்ட தொழிலாளா்களின் சுயவிவரங்கள் மற்றும் கைரேகை பதிவு ஆகியவை ஊராட்சியில் உள்ள கணினியில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாக உத்தண்டியூா் மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஊராட்சி அலுவலகத்தில் தொடா்ந்து கணினியில் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி பவானிசாகா் சாலை, எரங்காட்டூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பவானிசாகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பதிவேற்றம் செய்வதில் நெட்வொா்க் சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் பிரச்னை ஏற்பட்டுள்தகாவும் நெட்வொா்க் சீராக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா்.

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். போராட்டம் காரணமாக பவானிசாகா்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.