சிவகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள ஞானபுரத்தைச் சோ்ந்தவா் குப்பன் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (65).
இவா்கள் இருவரும் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெள்ளிக்கிழமை மாலை திரும்ப வந்துகொண்டிருந்தனா்.
முத்தூா்- ஈரோடு சாலையில் ஒத்தப்பனை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து, குப்பன் ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த குப்பனை அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

