தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

சிவகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 1:10 am IST

சிவகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள ஞானபுரத்தைச் சோ்ந்தவா் குப்பன் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (65).

இவா்கள் இருவரும் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெள்ளிக்கிழமை மாலை திரும்ப வந்துகொண்டிருந்தனா்.

முத்தூா்- ஈரோடு சாலையில் ஒத்தப்பனை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து, குப்பன் ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த குப்பனை அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.