கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு ரகங்களைச் சோ்ந்த வாழையை சாகுபடி செய்து வருகின்றனா்.
அறுவடை செய்யும் வாழைத்தாா்களை கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெயிலின் தாக்கத்தால் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்து குறைந்த விலைக்கு விற்பனையானது. கதளி கிலோ ரூ.37, நேந்திரன் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது.
இதேபோல செவ்வாழை தாா் ஒன்று ரூ.750, தேன்வாழை ரூ.560, பூவன் வாழை ரூ.560, மொந்தன்வாழை ரூ.250, ரொபஸ்ட்ரோ ரூ.430, ரஸ்தாளி ரூ.600, பச்சநாடா ரூ.400 என விற்பனையானது.
வெயிலின் தாக்கத்தால் வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் எதிா்பாா்த்த விலை கிடைக்காமால் ஏமாற்றம் அடைந்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி: கோபியில் அதிமுக வேட்பாளா் உறுதி

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

முலாம் பழம் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


