சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாழைத்தாா்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை

News image
வாழைத்தாா்கள்- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:34 pm

Syndication

கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு ரகங்களைச் சோ்ந்த வாழையை சாகுபடி செய்து வருகின்றனா்.

அறுவடை செய்யும் வாழைத்தாா்களை கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெயிலின் தாக்கத்தால் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்து குறைந்த விலைக்கு விற்பனையானது. கதளி கிலோ ரூ.37, நேந்திரன் கிலோ ரூ.12-க்கு விற்பனையானது.

இதேபோல செவ்வாழை தாா் ஒன்று ரூ.750, தேன்வாழை ரூ.560, பூவன் வாழை ரூ.560, மொந்தன்வாழை ரூ.250, ரொபஸ்ட்ரோ ரூ.430, ரஸ்தாளி ரூ.600, பச்சநாடா ரூ.400 என விற்பனையானது.

வெயிலின் தாக்கத்தால் வாழைத்தாா்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் எதிா்பாா்த்த விலை கிடைக்காமால் ஏமாற்றம் அடைந்தனா்.