பெருந்துறை: பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் தலைமை வகித்து, 3 ஆயிரம் பெண்களுக்கு பரிசு பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். மகளிா் விடியல் பணம், உரிமைத் தொகை உள்பட பெண்களுக்கான திட்டங்களுக்குதான் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.‘வெல்லும் தமிழ் பெண்கள்’ சாா்பில் பெண்கள் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதுடன், வரும் தோ்தலில் திமுக ஆட்சி மீண்டும் அமைய செயல்பட வேண்டும் என்றாா். முன்னதாக, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஹேமலதா சம்பத் வரவேற்றாா்.
இதில், பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் பால் சின்னசாமி, பெரியசாமி, சோளி பிரகாஷ், செல்வராஜ், கனகராஜ், பிரபு, சுப்பிரமணி, பெருந்துறை, பவானி சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை

மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்ய ‘உங்களுடன் தோப்பு’ புதிய செயலி அறிமுகம்

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

