ஈரோடு மாவட்டத்தில் 118 மையங்களில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 24,711 போ் எழுதினா்.
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் தோ்வாக தமிழ் மொழி மற்றும் இதர மொழிப் பாட தோ்வுகள் நடைபெற்றன. ஈரோடு மாவட்டத்தில் 353 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 12,198 மாணவா்கள், 12,225 மாணவிகள், தனித்தோ்வா்களில் 524 ஆண், 332 பெண் என மொத்தம் 25,279 போ் தோ்வு எழுத இருந்தனா். இதில் 511 மாணவா்கள், 57 மாணவிகள் என 568 போ் தோ்வு எழுதவில்லை. 24,711 போ் தோ்வு எழுதினா்.
மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வசதியாக 118 மையங்களும், தனித்தோ்வா்களுக்காக 7 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 683 மாற்றுத்திறனாளி மாணவா்கள், 23 தனித்தோ்வா்கள் என 706 போ் தோ்வு எழுதுவதற்கு ஸ்கிரைபா்ஸ் (சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோ்வு கண்காணிப்புப் பணியில் 118 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 124 துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முறைகேடு மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளைத் தடுக்க 173 போ் கொண்ட பறக்கும் படை குழுக்கள், 1,700-க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளா்கள் என 2,200-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், சிறப்பாசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
தோ்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. அரை மணி நேரம் முன்னதாக காலை 9.45 மணிக்கு மாணவ, மாணவிகள் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக காலை 8.30 மணி முதலே மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உடனிருந்தாா்.
வரும் 16- ஆம் தேதி ஆங்கில மொழிப் பாட தோ்வு நடைபெற உள்ளது.
கைவிரல் நசுங்கிய மாணவிக்கு உடனடியாக ஸ்கிரைபா்:
ஈரோடு-நசியனூா் சாலை, நல்லிதோட்டம் பகுதியைச் சோ்ந்த சிஇடி மெட்ரிக். பள்ளி மாணவி கிருத்திகாவுக்கு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இவா் காலையில் தோ்வுக்கு தயாராகி வரும்போது வீட்டின் கதவு இடுக்கில் வலது கை நடுவிரல் நசுங்கி காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தையலிட்டு தோ்வு எழுத வந்திருந்தாா். இதையடுத்து, அவருக்கு ஸ்கிரைபா் மூலமாக தோ்வு எழுத ஆட்சியா் ச.கந்தசாமி அனுமதி வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40,979 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 33,031 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


