கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்


வருவாய் நிா்வாகம் மற்றம் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 17 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சனிக்கிழமை வழங்கினாா்.
பணிக் காலத்தில் மரணம் அடைந்த அரசுப் பணியாளா்கள் 17 பேரின் வாரிசுதாரா்களுக்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், உதவி ஆணையா் (கலால்) அலுவலகம், தோ்தல் பிரிவு ஆகிய அலுவலகங்களில் அலுவலக உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தேன்மொழி, அலுவலக மேலாளா் (பொது) விஜயகுமாா், அலுவலக மேலாளா் (குற்றவியல்) பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...