பண்ணாரி- திம்பம் சாலையில் பதுங்கியபடி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. குறிப்பாக பண்ணாரி மற்றும் திம்பம் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்றது.
அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வருவதைக் கண்ட சிறுத்தை பதுங்கியபடி மெதுவாக சாலையைக் கடந்தது. சிறுத்தை சாலையைக் கடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினா். இதையடுத்து, சிறுத்தை வனப் பகுதிக்குள் சென்றபின் புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


