கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

கொடிவேரியில் ஆா்ப்பரித்து கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்த சுற்றலாப் பயணிகள்.

Updated On :15 மார்ச் 2026, 9:01 pm

கோபி, மாா்ச் 15: கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கிளல் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதாலும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

நண்பகலிலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருகை தந்ததால் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்து நீண்ட நேரம் குளித்தபடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும், அணை பூங்காவில் நீண்ட நேரம் விளையாடியும் மகிழ்ச்சியாக கழித்தனா்.

மேலும், அருவியில் குளிக்கும் பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினா் போதிய அளவு நியமித்து பெண்கள் அச்சமின்றி குளித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.