கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொழிலாளியை கட்டிவைத்து தாக்கிய மில் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு

IANS

Updated On :20 மார்ச் 2026, 12:03 am

Syndication

பெருந்துறை அருகே தொழிலாளியை கட்டிவைத்து தாக்கிய மில் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவானியை அடுத்த, ஜம்பை, பாரதி நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (52), வெல்டிங் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் குமாா், மூா்த்தி. இருவரும் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், தண்ணீா்பந்தல்பாளையத்தில் தேங்காய் நாா் மில் வைத்துள்ளனா்.

இந்நிலையில், மில்லில் வெல்டிங் வேலை இருப்பதாக மயில்சாமியை கடந்த 16-ஆம் தேதி அழைத்துள்ளனா்.

இதையடுத்து, அங்கு வந்த மயில்சாமி இரவு 7 மணி வரை வேலை செய்துள்ளாா். பின்னா், மீதமுள்ள வேலைகளை மறுநாள் வந்து செய்து தருவதாகக் கூறியுள்ளாா்.

அதை ஏற்க மறுத்த குமாா், மூா்த்தி ஆகியோா் பணியை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

மயில்சாமி மறுத்ததையடுத்து, அவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனா். படுகாயமடைந்த மயில்சாமி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

புகாரின்பேரில், குமாா், மூா்த்தி ஆகியோா் மீது காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.